search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை சேதம்"

    நெல்லிக்குப்பம் அருகே டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அந்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு டாஸ்மாக்கடைக்குள் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தயாநிதி (வயது 36) தலைமையில் நிர்வாகிகள் தெய்வீகன், பாலசந்தர், சிரஞ்சீவி, விஜயபாரதி, மணிமாறன் ஆகியோர் புகுந்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாநிதி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மீது நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் தயாநிதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். இதையடுத்து தயாநிதியை நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.

    ×